படம் பார்த்து கவி: கொடூரக்கையில்

by admin 3
20 views

*கொடூரக்கையில் குருதிக்குவளை*
குடிகெடுத்து குடித்திடவோ குவளையினுள் குருதி
குறுகிய குணமாய் குரல்வளையறுக்கும் கெடுமதியாய்
கூட்டாளிக்கே குழியெடுக்கும் கூறுகெட்ட கூட்டங்களும்
காவு கொண்டு  களித்திடும் காலமிது.
குருதி குடிப்பது கொடூர காட்டேரிகளா!?
கரம் கோர்த்தே கடைசியில் கழுத்தறுப்பது
கனிவற்ற  காட்டேரியிடமும் காணக் கூடுமோ!
கழியும் காலம் களித்தே கடந்திட
கூடி குலவியே கனிவாலே கொன்றிடும்
கேடு கெட்ட கேவலமான காரியங்களையே
களிப்பென களித்தே களியாட்டமிடும்  கலிகாலமிதனில் இன்
காணும் கயவரனைவருமே குருதியருந்தும் காட்டேரிகளே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!