படம் பார்த்து கவி: எரியும் மெழுகுவர்த்தி

by admin 1
42 views

எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்
பிரவாசிகள்
வானுயர பறக்கும் விமானத்தை விட
வலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிது
தனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்
தன்னை பற்றி எதுவுமே சிந்திக்காமல்
தன்னை சார்ந்தவர்களுக்காகவே வாழும்
மனிதம் உள்ள மனிதர்கள்
அடுக்கு மாடி கட்டிடங்கள் நிறைந்திருக்கும் நவீன நகரத்தில்
அவர்கள் வாழ்க்கை என்னவோ
அடுக்கு மாடி கட்டிலில் தான்
அறுசுவை உணவெல்லாம் மறந்து
காய்ந்த குபுஸ்களை
வருடக்கணக்கில் சாப்பிட பழகியவர்கள்
தொலைதூரம் கடந்து வந்தாலும்
தொலைபேசியிலேயே தங்கள் குடும்பத்தை நடத்த பயின்றவர்கள்
அடிக்கும் பாலைவன வெய்யிலும்
கொதிக்கும் தண்ணீரில் குளிக்க கற்றுக் கொண்டவர்கள்
சொல்வதற்கு இன்னும் நிறைய கதைகளும்,வலிகளும் உண்டு
ஏனோ
தன்னையே வருத்தி கொண்டு ஒளி தரும் மெழுகாய் தன்னை சார்ந்தவர்களுக்காக உருகி அதில் மாயும்
விட்டில் பூச்சிகள் நாங்கள்!

-இப்படிக்கு-
அயல்நாட்டு பிரவாசிகள்

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!