படம் பார்த்து கவி: கண்ணாடிக்

by admin 1
36 views

கண்ணாடிக் குடுவையில்
மெழுகின் ஒளியில்
அழகுற மிளிரும்
வண்ண மலர்கள்

தான் உருகி
சுற்றிலும் ஒளிர
தன்னுயிரைத் தரும்
மெழுகு விளக்குகள்

மிளிரும் மலர்கள்
விளக்கின் சூட்டில்
கருகி வாடினாலும்…….

நேசக்குரிய நங்கையின்
இதழ் சிந்தும்
புன்னகைக் காதலை
உணரா இதயத்தில்
தொடங்கும் பாதை
எங்கும் வாடாத
(ப்ளாஸ்டிக்)
நெகிழிப் பூக்கள்

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!