தேநீர் குமிழிகள்
கதிரோனின் உதித்தலுக்கும் மறைதலுக்கும் இடையே
வானம் பரவும் செந்நிற குமிழிகளென
இடைவெளியை நிரப்ப எப்போதும் ஒரு தேநீர்
தயாராகிக் கொண்டே இருப்பது அவசியமாகிறது …
நூல்களை புரட்டிக்கொண்டு எழுத்துக்களை உறிஞ்சிக் கொண்டு
ஒவ்வொரு மிடறாக உள்நுழையும் குமிழிகளின்
இனிப்பு சுவைக்கு சன்னலோரம் காத்துக்கிடக்கும்
செங்கதிரோனின் நிறம் அப்படியே படிந்துவிடும்
துளி மையும் துளி சிந்தனையும்
காகிதங்களை நிரப்பி வழிந்தோட துணையாகிறது
குவளை நிரம்பிய தேநீர்…
🌺நிழலி