படம் பார்த்து கவி: நீரிலும்

by admin 1
29 views

நீரிலும்
நிலத்திலும்
வாழ்ந்தும்

நாங்க
யாரையும்
ஏமாற்றிப் பிழைக்கலை

பின் ஏன்
பொய்யிலேயே
வாழ்வு நடத்தும்

பொல்லா மனிதரின்
போலிக் கண்ணீரை

சற்றும் யோசிக்காது
முதலைக் கண்ணீர்
என்றீர்

இதயம் துடிக்குதே
ஏனிந்த அவச்சொல்

இந்துமதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!