படம் பார்த்து கவி: மஞ்சள்

by admin 1
39 views
  • மஞ்சள் வெயில் *
    கண்ணை கவரும்
    இளவேனில் காலை
    கதிரவனோ மனதை
    மயக்கும் மாலை
    மஞ்சள் வெயிலோ
    என் மனதை கைது
    செய்து விட்டாய் உன்
    கதிர்களால் ;…..
    உறவுகளோடு
    உரையாடியதை விட
    என் உணர்ச்சிகளோடும்
    உணர்வுகளோடும்
    உனை கையில் ஏந்தி
    உன்னோடு உரையாடியதில்
    என் மனதை நகலெடுத்தவள்
    நீயே எழுதுகோள் எனும்
    பெயரில் !….
    நாள் குறிப்புகளோ
    நாளுக்கு நாள் என்
    நூலகங்கள் ஆகின்றன;…
    ஒவ்வொரு பொழுதும்
    என் இதழ்களுக்காக
    ஆவி பகிர
    காத்து கிடக்கிறது
    தேனீரோடு கோப்பைகள்:;…
    கதிரவனை வாழ்த்த வந்த
    மேக கூட்டங்களை
    வண்ணம் தீட்ட
    என் மேசை மீது காத்திருக்கும்
    என் வண்ண வண்ண
    எழுதுகோள்கள்;;;!!!…

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!