ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து ‘ஒரு கப் காபி கொடு’ என்பார். அவ்வளவுதான்.. சண்டை முடிந்துவிடும்.
புடவை வேணுமா, நகை வேணுமா, சினிமா, டிராமா போகணுமா ஹோட்டலுக்கு போகலாமா என்றெல்லாம் கேட்கவே மாட்டார்.. என் போக்கில் விட்டுவிடுவார். என் மீது இருக்கிற அன்பை அதிகம் வெளிக்காட்ட மாட்டார். அவர் புனைபெயரே என் பெயர்தானே!
– திருமதி சுஜாதா
ஒரு கப் காபி கொடு!
previous post