படம் பார்த்து கவி: உனை

by admin 1
29 views

உனை பார்த்ததும் எனக்குள் கோடி பூ பூத்தது உனக்கேனடி எதுவும் தோன்றவில்லை என கேட்பது நாகரீகமாகாது. காதல் எதையும் மாற்றுமாம் ஏனோ கடைசிவரை உனை மாற்ற எனக்கு தெரியவில்லை. உனக்குள் தான் எதுவும் பூக்கவில்லை ஆனால் நீ தூக்கியெறிந்த காலணியில் இட்டு வைத்த விதைகள் எல்லாம் செடிகளாகி புன்னகையோடு பூத்து குலுங்குகின்றன காதலோடு! -லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!