- மின் காந்த கரங்கள் *
இப்பேரண்டமே இருளில் மூழ்கிவிட்டாலும்
என் இதயத்தில்
உன் கை பட்ட நிமிடம்
தங்க குழம்பி உருவெடுத்து,;
வண்ணங்கள் இன்றி
பிறப்பெடுக்கும்
வண்ணத்து பூச்சுகள்
வட்டமிட்டு
பறக்க ஆயத்தமாகின்றன,;
ஓவியமாய் இருந்தாலும்
உன் கரம் பட்ட
நிமிடம் மின் காந்த
அலைகள் இயற்றப்பட்டு
என் சட்டையை தாண்டி
சரீரத்தில்
தகதகப்புடன்
ஒய்யாரமாய் பறக்க
தொடங்கி விடுகின்றன
இதயதுடிப்பில் பூத்த
தங்க தாரகைகள்,;
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)