படம் பார்த்து கவி: முதலை

by admin 1
42 views

முதலை கண்ணீர் மனிதர்கள்
கோபப்படுபவன் மனதில் உள்ளதை
அந்நேரத்திலேயே
கொட்டி விடுவான்
கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்
சுவையான சுளைகள் உள்ளதை போல்
கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்
சொல்லப்படாத ஓர் அன்பு நிறைந்திருக்கும்
சிரித்த புன்னகையிலும்
மறைத்த நஞ்சு நிறைந்திருக்கலாம்
ஏமாற்றி வேட்டையாடும்
தந்திரம் கொண்டது முதலை
ஒரு இரையை சேற்றில் புதைத்து வைத்து
அழுக வைத்து உண்ணும் பழக்கமும் அதற்குண்டு
இறந்தது போல நடித்து பாவப்படுவோரை வஞ்சிக்கும் குணமும் அதற்குண்டு
அது போல தான்
நம்மை சுற்றியும் நிறைய ஆபத்தான
முதலை மனிதர்கள் உண்டு
சிந்தும் புன்னகையில்
மங்கி விடாதே
போலியான கண்ணீரில்
பலியாகி விடாதே.

லி நௌஷாத் கான்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!