படம் பார்த்து கவி: முத்தின கருது

by admin 1
54 views

முத்த கருது வேணாம்
பால் கருது சோளம்
வேண்டுமென
அடம் பிடித்தேன்
எல்லாமும் பால் கருதா வாங்குன்னா
கட்டுபடியாகாது
அதனால
கருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்
அம்மா
அவள் அதட்டலுக்கு பயந்து தான் போனேன்
வாடி போன முகம் கண்டு
இறுதியாய்
ஒரு பால் கருதை
சோளம் விற்கும் அண்ணாச்சி
அன்பாய் கொடுத்து விட்டு சென்றார்
வருடங்கள் உருண்டோடியது
வறுமையும் போனது
விரும்புவதை வாங்கும் வருமானம் இருந்தும்
காலம் சக்கரை வியாதியை
தந்து விட்டு சென்றதால் என்னவோ
பால் கருது சோளத்தின்
பால்வாடி நினைவுகளை
நினைத்து பார்த்து மட்டுமே
நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது
காலம்
ஒன்றே ஒன்றை கற்று தந்து விட்டது
எல்லோருக்கும் எல்லாவற்றையும்
தராதென்று!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!