எழுத்தாளர்: நா.பா.மீரா
வெளியே பலத்த வேகத்துடன் சூறாவளிக் காற்று……வீட்டுக்குள் முடங்கியிருந்த காமினியின் மனத்திலும்தான் …..காற்றுடன் பலத்த மழை வேறு..
காமினியின் விழிகளும் இடைவிடாது நீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன .
யாதவை நம்பி இப்படி ஏமாந்துவிட்டேனே …. ஒற்றைப் பெண்மணியாய் தன்னை வளர்க்கும் தாயிடம் நாம் ஏமாந்த கதையை எப்படிச் சொல்வது?
யாதவ் அவள் காதலன். …. நேற்று வரை— வயிற்றில் கருவுடன் — ஒதுங்கி அவளை ஒதுக்கியும்விட்டான்.
அறையை விட்டு சாப்பிடக்கூட வராமல் முடங்க…..
மறுநாள் விடியலில் …..காற்றும் மழையும் ஓய்ந்து பெருத்த அமைதி .
காமினியின் மனத்திலும்தான் ….. பயம் மற்றும் அதிர்ச்சியில் கலைந்தகருவினால்.
முற்றும்.