படம் பார்த்து கவி: அவளின் வலிகள்

by admin 1
38 views

அவள் வலிகளை உணர்ந்தவன்
ஒருபோதும்
அவள் குறைகளை
எள்ளி நகையாடுவதில்லை
மூச்சிருக்கும் வரை
அவளுக்கு உறுதுணையாய்
இருக்க வேண்டுமடா
மூணு நாள் தீட்டு
எவன் கொண்டு வந்ததடா?
அவள் இல்லையேல்
அகிலம் இல்லை
எதன் வழி வந்தாயோ
அதன் வலி புரியாமல்
தீட்டு பார்ப்பவன்
இழியவன் தான்!
அவள் குப்பை தொட்டியில்
வீசியெறிந்த
இரத்தம் நிறைந்த
நாப்கின் பேட்களில்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவள் சொல்லாத
இரணங்களும்-வலிகளும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!