- இனிய தனிமை*
உறக்கம் மறந்து கதைத்ததில்
இரவின் விழிகள்
மூட மறுத்துவிட்டன,;
மின் விளக்கு வெளிச்சம்
போதும் உயிரில்லையானாலும்
தனிமையுடன்
உரையாடி இல்லை
உறவாடி தீர்க்க…
உறவுகள் இல்லை
உறைந்து போகவில்லை,;
இரவின் உறவுடன்
இனிமை தனிமையுடன்
ஒளி விளக்கின் கீழ்
பஞ்சு மெத்தையின் மேல்
படுத்துறங்க மன மின்றி
மன அமைதியோடு
அமர்ந்து கதைத்து விட்டோம்….
கடவுளின் கைகளில்
அனைவருமே
பொம்மைகள் தான்,!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)