படம் பார்த்து கவி: உயிர்ப்பித்த காதல்

by admin 1
20 views

முடியும் என மனதில் நம்பினேன்
மூடிய விழிகளில் ஒளியாய் தெரிந்தாய்.
என் நெஞ்சம்  உருகச் செய்தாய்,
வாடிய வாழ்வில்  மழைத்துளியாய் வந்தாய் .
மரணம்  தழுவியதால் எலும்பாய் தெரிகிறாய்
மலர்ச்சி கொண்டேன் உன்னை பார்த்ததில்
புண்ணில் மருந்தாய்  சரி செய்வாயா??
தொலைந்த உள்ளம்  உன்னிடம் இருக்கிறதே
என் அன்பே எனக்கு மூச்சாய்  வந்துவிடு ,
உயிர்ப்பித்த காதல் நித்தம் நிலைக்கும்.

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!