படம் பார்த்து கவி:  கச(ப்பு)க்கும் கரிசனையே

by admin 1
40 views

கசந்திடும் காயெனினும்

வசம்தரும் வாழ்வினிலே

நிசம் அதை அறிவீரோ

விசமில்லை உணர்வீரோ

சுவையினிலே சுகம் இல்லை

சுகமதிலே சுகம்தரவே

சுகம் பெறவே வேணுமேனில்

சுகித்திடுவோம் சுவையது பாராதே

பசுமையின் அழகுடன்

பார்க்கவே பொலிவுடன்

தன் சுவையில் தரமின்றி

இன்சுவை இழந்திடினும்

நேசமிகு நெஞ்சுடையோர்

வேசமிலா பாசமென

கசந்திடும் கடும் சொல்லிலுமே

கனிவுமிகு கரிசனை(யோ)யே

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!