படம் பார்த்து கவி: காரிகையின்

by admin 1
53 views

காரிகையின் கரிய விழிகள்
அஞ்சனம் அழிய அழுகின்றன..
கடந்து விட்டேன்
மறந்து விட்டேன்
இழந்து விட்டேன் என்ற
கரும் பக்கங்கள் மொழிகையில்….
இழந்து விடவுமில்லை
இறந்து விடவுமில்லை…
உருவமாய் நானிருக்க
அருவம் தேடுகிறாய்…
வீணையாய் நானிருக்க மீட்டும் விரல்கள் முடக்குகிறாய். …
வேர் விட்ட என் காதலை தூர்வாரிச் சென்றாய் நீ…
சரி தானே
விறகு விற்பவனுக்கு வீணையென்ன விறகென்ன
இரண்டுமே மரம் தானே..‌

இளவெயினி…

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!