படம் பார்த்து கவி: தமிழமுது

by admin 2
51 views

உயிரையும் மெய்யையும்
உருக வைக்கும் எழுத்துக்களின்
ஏகோபித்த ராணி நீ…..
வான் புகழ் வள்ளுவனின்
எழுத்தாணியில் எழுசீர்
வெண்பாவாய் மலர்ந்த
எம் தாய்த் தமிழ் எழுத்துக்கள்
பாமாலையாய் மட்டுமல்ல
உதிரிகளாயும் சிறப்பே!
ஒவ்வொரு சொல்லிலும்
ஒரு பாணி….
ஒவ்வொரு பாணியிலும்
ஒரு சொல்…
உச்சரித்து மகிழும்
இன்பம் ஈந்த தாயே
வாழ்த்த வயதில்லை
தாள் பணிந்து
வணங்குகிறேன் நின்னையே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!