படம் பார்த்து கவி: பிரகாசமாக

by admin
99 views

பிரகாசமாக ஒளி வீசவும்…
இன்னிசை ராகங்கள்
என் உள்ளத்தில் ஒலிக்கவும்…
சிவப்பு நிற பந்தாக
என் கண்ணுக்குள்
வட்டமிடுகிறாய் …
பெண்ணின் முகத்துக்கு நிலவை ஒப்பிடுவர்..
அந் நிலவில் கூட பள்ளம் குழிகள் உண்டு…
உன் அழகை எத்திசையில் நோக்கிலும்…
விஞ்ஞானம் கூட
தோற்றுப் போகும்..
இன்றைய அட்சய திருதியில்
என்னை போன்ற
ஏழைக்கு…
உன்னை பெற்றுக் கொள்ள முடியாது..
ரசிக்க மட்டுமே
முடியும்….
உனது ரசிகனாகிய
எனக்கு உனது அருமை புரியும்…
இது கூட ஒரு ஆத்மீக
சங்கீதம் தான்…

✍️ M.W. Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!