படம் பார்த்து கவி: மண்

by admin 2
46 views

எங்கோ பெய்தது மழை
இங்கே மண் வாசம்

நாம் பிறந்து தவழ்ந்து
நடந்து வீழ்ந்த போதும்
தாயாக தாங்கிய மண்…

ஆறடியே சொந்தம் என
அறிந்தும் உணராத மனிதனையும்
தாயாக தாங்கிய மண்…

வளமான வாழ்வின்
ஆதாரம் மண்

மண்ணின்றி உயிர்களில்லை
உலகில்லை

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!