தேவையான பொருட்கள்
- கோழி இறைச்சி – சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
- ஹெவி கிரீம் – 1 பாக்கெட்
- கருப்பு மிளகு – 1 கரண்டி
- பூண்டு – ஆறு பல்
- மிளகாய் சாந்து – 1 கரண்டி
- மஞ்சள் தூள் – 1 கரண்டி
- முட்டை – 1
- எலுமிச்சை சாறு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – 1 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- கோதுமை மாவு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் பூண்டு மற்றும் கருப்பு மிளகை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
- பின், கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு, ஒரு பௌலில் ஹெவி கிரீம், மஞ்சள் தூள், மிளகாய் சாந்து, இடித்த விழுது, நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்துக் நன்றாக கிளறிக் கொள்ளவும்.
- தொடர்ந்து, ஒரு முழு முட்டையை கிளறிய பாகங்களோடு பௌலில் உடைத்தூற்றி கிண்டிடவும்.
- அதன் பின்னர், வெட்டிய கோழி இறைச்சி துண்டுகளை கலவை கொண்ட பௌலில் கொட்டி கிண்டிடவும்.
- பிறகு, கலவையில் கிளறிய கோழி இறைச்சி துண்டுகளை கோதுமை மாவில் ஒற்றியெடுக்கவும்.
- அவைகளை ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மூடி போட்டு பதப்படுத்திடவும்.
- கலவைகளின் சுவையணைத்தும் கோழித்துண்டுகளில் கலந்திட இது வழிவகுக்கும்.
- பின், அடுப்பை பற்ற வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- மிதமான சூட்டில் மாவுக் கொண்ட கோழி இறைச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுப்பில் போட்டிடவும்.
- ஏறக்குறைய 7 – 8 நிமிடங்களில் பொன்னிறமாக வரும் வரை கோழி துண்டுகளை பொரித்தெடுக்கவும்.
- இறுதியாக, பொரித்த மொறு மொறு சிக்கன் பொரியலை தட்டில் வைத்து ஸ்னேக்ஸ்சாக பரிமாறிடலாம்.