அறுசுவை அட்டில் : தக்காளி குருமா

by Admin 4
87 views

தேவையான பொருட்கள்:

🔻தக்காளி – 3

🔻வெங்காயம் – 1

🔻பச்சை மிளகாய் – 3

🔻அரைத்த தேங்காய் விழுது – 2 கரண்டி

🔻இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

🔻கரம் மசாலா – 1 தேக்கரண்டி

🔻மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

🔻உப்பு தேவைக்கு

🔻கொத்தமல்லித் தழை – தேவைக்கு

தாளிக்க:

🔸ஏலம்,

🔸பட்டை,

🔸கிராம்பு,

🔸சோம்பு,

🔸அன்னாசிப்பூ,

🔸பிரியாணி இலை,

🔸புதினா,

🔸எண்ணெய்

செய்முறை:

🔹எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

🔹வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

🔹பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.

🔹தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

🔹கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!