அறுசுவை அட்டில் : இட்லி பொடி

by Admin 4
13 views

இட்லி பொடி

💠தேவையான பொருட்கள்:

🔹3 கை அளவு உளுந்து

🔹3 கை அளவு கடலை பருப்பு

🔹25 வர மிளகாய்

🔹3 முழு பூண்டு

🔹5 கொத்து கருவேப்பிலை

🔹1 கை அளவு கருப்பு மற்றும் வெள்ளை எள்

🔹1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

🔹தேவையான அளவு உப்பு

🔹1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

💠செய்முறை:

🔸தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

🔸ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.

🔸கடலை பருப்பு மற்றும் உளுந்து நிறம் மாறியதும் வர மிளகாய் எள் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

🔸வர மிளகாயில் சூடு ஏறியதும் பூண்டு பெருங்காயத்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

🔸எல்லாம் பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.

🔸நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

🔸இப்போது இட்லி பொடி தயார்.

#பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!