என் மன வானின் 
வானவில்லை 
சூறையாடி வந்த 
மழை முகில் குவியலோ !
இல்லை…..
என் கனவுலகின் 
வர்ணஜாலங்களின் 
ஊற்றா !
இல்லை 
என் வாழ்வை 
வசந்தமாக்க வந்த 
வர்ண தேவதை
புயலோ !
இல்லை….
என் கவலைகளை மறந்து 
உன் வர்ணங்களை வருடி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து விளையாடி 
மகிழவோ !
இல்லை …..
அந்த பிரம்மனே மதிமயங்கிட 
உன் வர்ணங்களை தொட்டு பேரழகி ஓவியத்தை தீட்டிடவோ !
இல்லை….
நீ எனக்கு புரியாத 
புதிரோ….. !!! 
— இரா. மகேந்திரன்—
படம் பார்த்து கவி:
previous post

 
