படம் பார்த்து கவி:  அடிக்கணையின் துணுக்கு

by admin 1
111 views

சேவைக்காய் நெய்தது
தேவைக்காய் மாறி
பாவைக்குமென்றாகி
கோவை கலைந்த மணியாய்
சீர்கவை அழகும் சீர்குலைய
சீரற்றுப் போனதுவே நூற்கோவையும்…
கிழிசலைத் தைத்தவன்
தைத்ததைக் கிழித்திட
நவநாகரிக காலமென்பதா
இல்லை துணி துண்டானாலும்
பிணிப்பேய் பீடித்தவனால்
கன்னி களவாடப்பட்டாலும்
கலிகாலமென
எம்மாற்றத்தையும் ஏற்றுக்கடக்கும்
சமூக அலட்சியப்பார்வையின்
அடிக்கணையின் ஒரு துணுக்கு என்பதா!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!