படம் பார்த்து கவி: அதிகாலை நேரம்

by admin 2
28 views

அதிகாலை நேரம்
சாலையோரம்
வெள்ளோட்டமாய்
மெல்லோட்டம் போக
தேகம் கொஞ்சம் சூடாகும்
வியர்வை கொஞ்சம் வெளியேறும்
இரத்த ஓட்டம் சீராகும்
கூடு விட்டு ஜீவன்
ஓடிடாமல் தடுக்கும்

வாழ்வென்பதே
மெல்லோட்டம் போலே
இன்பதுன்பத்திற்கிடையே
நிலை தடுமாறாமல்
சீராக ஒரு ஓட்டம்
கூடு விட்டு ஜீவன்
ஓடும் வரை வேண்டும்

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!