படம் பார்த்து கவி: அன்பு கூட வம்பு

by admin 1
56 views

அன்பு கூட
வம்பாய் மாறும்
பாசம் கூட
வேசமாய் தெரியும்
நேசம் கூட
நெருக்கடிகாய் தோன்றும்
கசக்கும் வேப்பிலையின்
மகத்துவம்
மானிடர்களுக்கு புரியாது
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தம் கூட
நஞ்சு தான்
கேட்காத வரை
எதையும் கொடுக்காதே
தானே சென்று
கொடுக்கப்படும் பேரன்பு கூட
இங்கு மதிக்கப் படாது
இது தப்பில்லை என உணர்ந்தால்
நீயும் சக மனுசனாய்
சந்தோசமாய் வாழலாம்
அறம் இதுவல்ல என
அகத்தில் மட்டுமில்லாமல்
புறத்திலும் பேசினால்
இப்பிரபஞ்சம்
உன்னை அடுத்த கருவேப்பிலையாய்
பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறதென அர்த்தம்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!