படம் பார்த்து கவி: அழுகை ஓய்ந்தது

by admin 2
28 views

அலறிய குழந்தையின்
ஆவல் புரியாமல்
இதுதான் காரணமோ என
ஈசனை வேண்டி
உடனே வாயில் ரப்பரை
ஊக்கத்துடன் சொருக
என்னவென்று புரியாமல்
ஏங்கிய பாலென எண்ணி
ஐயத்தை மறந்து
ஒழித்தது அலறலை
ஓய்ந்த குழந்தையின் அழுகைக்கு
ஔடதமாக உதவிய சிப்பரே
அஃதே என் நண்பன் என
சேயினை ஏமாற்றியதை அறியாமல் தாய் மகிழ்ந்தது உண்மை

உஷாமுத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!