படம் பார்த்து கவி: இயற்கையில்லா பொய்கை

by admin 2
44 views

அன்று
சுற்றி பச்சை விருட்சங்களும்
அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும்
மேலே சமதள நீர்பரப்பையும்
நீரிலே வண்ண அல்லிகளும்
அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும்
நீரூற்றில் ஒட்டி உறவாட விரும்பாத இலைகளும்
மின்னும் செங்கதிரொளியினால் சிதறுண்டு ஓடும் சிறு மீன்களும்
தடாகத்தில் நீந்தி ஆட்டம் போடும் சிறுவர்களும்
கள்ளூர பார்வை பரிமாறும் காதலர்களும்
குட்டையில் நெளியும் ஆகாய பிரதிபிம்பத்தை களைத்தும்
இருளின் நிலவன் இருவன் என்றும்
ஊடல் கொண்ட நாம்
அறியவில்லை இவையனைத்தும் மாயமாகுமென்று…..
ஆம்…
இயற்கை நீரூற்று இன்று
நெகிழிகளின் உறைவிடமாக
காகித குப்பைகளின் இருப்பிடமாக
கழிவுகளின் கழிவறையாக
உபயோகமற்று வறண்ட நிலையில்
மனிதன் உருவாக்கினான்
இயற்கையில்லா பொய்கையை
தன் செல்வ செழிப்பில்
தன் வசிப்பிடத்தின்
ஒரு பகுதியாய்
ஆழிபோல் ஆர்ப்பரிக்கும் செவ்வகபொய்கையை….!

✍️அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!