படம் பார்த்து கவி: இயற்கையின் குமுறல்

by admin 2
40 views


அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!
இயற்கையின் அழகிலும்
இத்துணைக் கொடூரம்.
ஆம்,
யாரால்?
இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!
அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடே எரிமலையின் இச்சிதறல்!
அனல் ஆற்றில் அடித்து செல்லப்படும் அனைத்தும்,
பெண்ணின் மன அடி ஆழத்தில்
மனக்குமுறலின் வெளிப்பாடு தோன்றும் நாள் எந்நாளோ?
எவை எவை அடித்துச் செல்லப்படுமோ?
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!