படம் பார்த்து கவி: இருள் ஆழியில்
ஒளியின் தீபங்கள்!

by admin 1
40 views

நிறங்களின் சங்கமம்
மனதை அசைக்கும்
நீரின் அலைகளில்
அமைதி ததும்பும்.
சுடரின் அசைவில்
கண்களின் லயம்
மெழுகின் உருகலில்
காதலின் மயம்.
ஒவ்வொரு தீபமும்
ஒரு புதிய சொல்
இருளின் அமைதியில்
பூக்கும் ஒரு பொன்.

இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!