படம் பார்த்து கவி: உன் அருகில்

by admin 2
74 views

தெரு விளக்கு ஒளி சன்னமான

ஒரு திகிலை எனக்குள் விதைக்க;

பறந்து கொண்டிருக்கும் துண்டு சீட்டுகள்;

கரந்து வரும் அச்சம்
மிகுதியாக;

மனம் மரத்துப் போய் நிற்க;

மறந்து போய் ; உன் அருகில்

நான் வந்து, மென்மையாய் உன்னைத்

தூக்க; அடங்கா சிரிப்பொன்று வந்தது;

நீ ஒரு பஞ்சு பொம்மை

எனக் கண்டு கொண்ட அக்கணம்.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!