படம் பார்த்து கவி: உன் பேரை

by admin 2
38 views

உன் பேரை சொல்லும் போதே
உமிழ்நீரும் ஊற்றெடுக்கும்
உடன் பிறப்பு என்றாலும்
பங்கீடு பகையாகுதே

குளிரும் இல்லாது
வெயிலும் இல்லாது
இதமான சூழலிலே
உனக்கு ஜனனம்

உதடும் படாமல்
பல்லும் படாமல்
தாடைக்கும் நாவுக்கும்
இடையே கரையும்

இனிப்பும் இல்லாமல்
கசப்பும் இல்லாமல்
இடையே உனக்கொரு சுவை

ஆறு சுவையில்
ஆறாத சுவை உனக்கு
ஆறு முதல்
அறுபது வரை
ஒதுக்காத சுவை உனக்கு

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!