படம் பார்த்து கவி: உரல்

by admin 1
43 views

அடுக்களையில் இருந்தாலும்
ஆலையில் இருந்தாலும்
தனி சிறப்பானவன் நீ

நெல்லிலிருந்து உமி பிரிந்து அரிசி கிடைத்தது உன்னால்

வில்லிலிருந்து அம்பு வந்தால் உயிர் பிரிந்திடும் தன்னால்

அடுக்களையில் அரைவேக்காடு முட்டைக்கு மிளகு இடித்தாய்

வைத்திய சாலையில் நோய்க்கு மருந்தாக ஆயிரம் வேர் இடித்தாய்

அசையாமல் நிற்கும் உரல்
அசையும் உலக்கையால் பொருள்
அடுத்த நிலை அடையுமே

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!