படம் பார்த்து கவி:  எச்சொற்களால் நிரப்புவது

by admin 1
50 views

கைக்குழந்தையாகிப் போன
நீர்க்குடுவை
சுமையெனக் கருத
இடமில்லை
சுகமானதாகிப் போனது..
வசீகர நிறத்தால்
எத்தனை நிறங்களில்
வடிக்கப் பட்டாலும்
உள்ளிருக்கும் நீரின்
உண்மைத் தன்மை
மறைக்கப்படுமோ!
நீரின்றி அமையாது
உலகெனின்
நீ இன்றி
பயணப்படாது
பயணம்..
தாகத்தின்
தாக்கத்தில்
தங்கமாய் நின்று
அங்கமாய் மாறும்
நினது பெருமையை
எச்சொற்களால்
நிரப்புவது!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!