படம் பார்த்து கவி:  ஏழையின் பருப்பே

by admin 1
47 views

குழம்பு வைக்க
குழப்பம் வரும்போது
அம்மாவின் முதல் தேர்வாய்
நீ இருக்கையில்..!

காய்கறிகளின் விலை
ஏறினாலும்
இறங்கினாலும்
கவலை இல்லை எங்களுக்கு
கைவசம் நீ
இருக்கையில்..
என்றிருந்தோம் ..!

மாமிசத்தின் விலையாய்
மலையேறி விட்டாய் நீ..!
இனி என்ன செய்வாள்
என் ஏழை அம்மா..??!

ஷே.சாகுல்அமீத்
🙏

You may also like

Leave a Comment

error: Content is protected !!