படம் பார்த்து கவி: ஓவியன்

by admin 1
64 views

அவன் மிக சிறந்த ஓவியன்
பார்ப்பவைகளை எல்லாம்
தத்ரூபமாக வரைபவன்
இவ்வளவு ஏன்
நீங்கள் காண நினைக்கின்ற
கற்பனைகளை கூட
தன் ஓவியத்தால்
கண் முன் கொண்டு வருபவன்
அப்படி பட்டவன்
தூரிகைகளின்
கேலி கிண்டலுக்கு உள்ளானான்
ஆம்
அவளை அவனால்
கண் கொண்டும் காண முடிவதில்லை
தூரிகை கொண்டும்
வரைய முடிவதில்லை
ஓவியங்களை எல்லாம்
ஓவியமாய் வரைய முடியுமா என்ன?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!