இன்னும்
இருபது ஆண்டு கழித்து
கங்கையும்,காவிரியும்
ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல்
வற்றி போயிருக்கும்
பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்
அன்றைய தண்ணீர்களை
உங்களின் கண்ணீரை கொண்டும்
வாங்க இயலாது
பணக்காரனுக்கு மட்டுமே
தண்ணீர் என்ற காலம் வர
வெகுதூரமில்லை!
-லி.நௌஷாத் கான்-