படம் பார்த்து கவி: கண்ணாடி மனம்

by admin 1
8 views

அனைத்து ஆசைகளையும் அடைய முடியாத வாழ்க்கையில்,
இறுதியில் மிஞ்சுவது துயரம் மட்டுமே.
துறவரம், சில உள்ளங்கள் அதை விரும்பி ஏற்க,
சிலரோ காலத்தின் பிடியில் பக்குவப்பட்டு அதனுள் இணைகின்றனர்.
மனதை ஒருமுகப்படுத்தி,
பற்றுகளையும், எதிர்பார்ப்புகளையும் அறுத்து,
வாழும் ஒரு தனி உலகம் அது…
அனைவராலும் நுழைய முடியாத அதிசய உலகமும் அது…
அமைதியின் சூழல் ஆர்ப்பரிக்கும் மனதை ஒருமுகப்படுத்தி வாழும் உன்னத வாழ்வு.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!