படம் பார்த்து கவி: கார்மேச் சாயல்

by admin 1
57 views

கருத்து திரண்ட
கார்மேச் சாயல்
நின்னுடையது..

காலமெல்லாம்
காத்திருந்து
வரமாய் பெற்ற
நிறத்தின்
மகிமையை
என்னவென்று சொல்வது?

துண்டு துண்டாக
இறுதிவரை
உழைத்து
கரியாகிப் போனாலும்
கடைசிப் பக்கத்தையும்
முதல் முகமாக
மாற்றும்
கருநிறக்கரி நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!