படம் பார்த்து கவி: கோள்கள்

by admin 1
39 views

புவனத்தைச் சுற்றி
கவனத்தை ஈர்க்கும்
கோள்களிடம் நம்
கேள்விகளை பல
வேள்வி செய்து
தோல்வி வேண்டாம்
வெற்றியை மட்டுமே
பற்றுள்ள வாழ்வில்
சுற்றி வந்து தா
என வினவினாலும்
நம் விதி ஏற்கனவே
“தம்” பிடித்து எழுதப்
பட்டது என உரைக்கலாம் நல்லவற்றை மட்டுமே
கள்ளத்தனமின்றி செய்தால்
வெல்ல வாய்ப்பினை
கோள்கள் தருவதோடு
தோள் கொடுத்து உதவுமென
மாறா நம்பிக்கையோடு
தீரா முயற்சி செய்வோம்!!

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!