படம் பார்த்து கவி: சத்தமில்லா சுத்தம்

by admin 1
44 views

வெட்ட வெளிதனில்
கானகப் பாதைக்குள்
வெட்கித் தலைகுனிந்து
எதிரில் எவருமில்லா
ஆளரவமற்ற இடம்
தேடியலைந்த காலங்களுக்கு
கால்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
புதுத்தெம்பைத் தந்து
மாதம் ஒரு முறை
சுழற்சியாய்
சுழன்றாலும்
மனவலியின் காயங்களுக்கு
மருந்தாய் வந்து
உணர்வுகளைக் கொதிகலனிடாமல்
மதிப்பாய்
வலம் வரும்
சத்தமில்லா சுத்தம் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!