படம் பார்த்து கவி: சாக்கோல்

by admin 1
74 views

நெருப்பு குண்டலத்தில் தான் குதித்து
நிறத்தை தான் நீ
மறந்து
கங்கென காற்றில் தான் பறந்து
கணகண நீ எறிய
வறுமை கொண்ட வீட்டிலியே வாழ தான் வந்து
சலவை காரர்கள் கொண்டாட
சலிப்பேதும் ஏதும் நீயும்
கொண்டதில்லை
அடுக்கு மாடி வசித்தாலும்
அடுபங்கரைகளை தாண்டுவதில்லை
சாக்கோல என்ற பெயர் கொண்டு
சகல பொருட்களிலும்
கலப்பதுண்டு
புகைத்ததால் சாம்பலாய் வெளிவந்து
புழு, பூச்சிகளை அழிகிறாயே
இயன்றவறை உனை தந்து
இயல்பாய் நீயும் இருக்கிறாயே
கருப்பாய் நீயும்
இருப்பதாலே
கவனிப்பாற்றி கிடக்கிறாயோ!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!