படம் பார்த்து கவி: சிந்தாமல் சிதறாமல்

by admin 2
38 views

சிந்தாமல் சிதறாமல்
நீர்த்துளிகளைத்
தொண்டைப் பாதைக்குள்
பதமாய் அனுப்பும்
உனது
அன்பிற்கு
அடைக்குந் தாழில்லை…
உதடுகுவித்து
உறிஞ்சும் போது
கண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்
முடித்துக் காட்டி
உனைப் போல்
உழைக்க யாரால் முடியும்?
ஊதுகுழலால் ஊதி ஊதி
நெருப்பைப் பெருக்கினான்
ஆதி மனிதன்…
நீயோ
நீர் பானம் அருந்த
சிறு குழலானாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!