படம் பார்த்து கவி: சுகம்

by admin 1
78 views

சுளை சுளையாய்
வடிவேற்ற விரல்கள்
அனலிலோ அசுத்தத்திலோ
சுகம்கெடாதிருக்க
சுற்றி அணைத்து
சுகம் காக்கும்
கையுறையாய்
பொக்கிஷக் கீற்றுக்குள்
புதைந்து கிடக்கும்
மணிமுத்து மனம்தனை
எதிரெண்ணம்
அழுக்காறு அண்டாது
நேர்மறை எனும் உறை
தரித்து தடுத்தால்
சுகமான சுகந்தம்
மனதின் சுகத்தினை
என்றென்றும் காத்திடுமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!