படம் பார்த்து கவி: சுள்ளி சுமந்த கள்ளி

by admin 2
52 views

சுள்ளி சுமந்த கள்ளி
புள்ளிமானைப் பார்த்ததும்
துள்ளித் துள்ளி ஓட….

கள்ளிப் பழம் கண்டதும்
எள்ளியவர்களை நினைத்து
கொள்ளியாய் துடிதுடிக்க….
உள்ளிருக்கும் உயிர் வளர
கள்ளி நீ உதவுவாயா?

வள்ளி எனக்கு
முள்ளித் தராமல்
அள்ளிக் கொடு
பிள்ளைப் பேற்றை…

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!