படம் பார்த்து கவி: செம்பருத்தி நீ உசத்தி

by admin 1
41 views

சிவப்பு வண்ணத்தின் மீது
உவகை அதிகமானதால்
வீட்டில் வளர்த்தேன்
அழகு செடியை
பழகி தினம் பாடி
உனக்கு நீர் வார்த்ததில்
எனக்கு கிடைத்தது
செக்க சிவந்த
எக்கச்சக்கமான செம்பருத்தி
மலர்………. உன்னை
பார்த்தாலே பரவசம்
சோர்வை போக்கும்
நீ எனக்கு உசத்தியே…
ஒரு நாள் மட்டுமே மலர்ந்து
திருநாளாக ஜொலிக்கும்
உன்னிடம் வாடினாலும்
சோர்ந்து போகக்கூடாது
என்ற பாடத்தை கற்றேன்
பாடம் சொன்ன நீ
உசத்தியான குரு தான்!

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!