படம் பார்த்து கவி: தளிர்

by admin 1
108 views

சின்னக் கண்ணம்மாவின்
சிவப்பு வண்ண பாட்டிலில்
சொச்சமிருக்குது தண்ணீர்!
எட்டிப் பார்த்து
எண்ணிக் கொண்டவள்
தாகம் தாங்கி
விக்கல் மறைக்கிறாள்!
பள்ளிமுனைப் புதருக்குள்
காத்துக்கிடக்கும்
கத்தரிக்காய் செடிக்காக!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!