படம் பார்த்து கவி: திரும்பி பார்த்ததுக்கே

by admin 2
50 views

திரும்பி பார்த்ததுக்கே
திருவள்ளுவனானேன்டி
கண் பார்த்தால் கலிங்கத்து பரணி
கொஞ்சும் கொலுசொலியில் சிலப்பதிக்காரம்
மணக்கும் உன் கூந்தல் மல்லிகையில் மணிமேகலை
சிலுக்கும் ஜிமிக்கியில் சீவக சிந்தாமணி
இடை நடை மேல் வழியும் வியர்வை துளியில் வளையாபதி
மயிலாய் மழையில் ஆடும் நடனத்தில் அண்டமே பிரமித்து போகும்
குண்டலகேசி
இப்படி இலக்கியங்களும் -ஐம்பெருங் காப்பியங்களும்
அதிசயித்து நம் கதையை காதலாய் பேசிக் கொண்டிருக்கின்றன!!
மறு ஜென்மம் எடுத்து மீண்டுமொருமுறை பார்க்காதே
இனி உன்னை காதலாய் எழுத
என் தமிழ் போதாது!!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!