படம் பார்த்து கவி: திறவா கதவாய்

by admin 1
104 views

திறந்திடுவாயோ திறவா கதவே

இரும்பு கதவினும் இறுகிய இதயமே

இதயத்தின் வாசலிலே இறைஞ்சியே நிற்கின்றேனே

இரவெது பகலெது பாராது நிற்கின்றேனே

இரக்கமிகு இரவோனாய்
இதயம் திறந்தே ஒளிர்வாயோ

இறவா உனதன்பை இரங்கியே இரந்திடுவாயெனில்

இணையிலா உனதன்பாலே
இன்பமாகிடுமே

இனிவரும் என்னினிய நாளெலாமுமே

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி

சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!